;
Athirady Tamil News

வட கொரியாவில் சாமான்யர்களுக்கு புதிய தடை !!

0

வடகொரியாவில் உள்ள மக்கள் அந்நாட்டு தலைவர்களின் பெயரை தமது பிள்ளைகளுக்கு வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் மகளின் பெயரை (கிம் ஜு ஏ) வைத்திருக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்குள் அவர்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிம் ஜோங் உன் தனது குழந்தைகளின் புகைப்படங்களை கடந்த சில ஆண்டுகளாக வெளியிடாமல் இருந்து வந்தார்.

ஆனால், சில மாதங்களாக கிம் ஜோங் உன்னின் மகள் கிம் ஜு ஏ பொதுவெளியில் தனது தந்தையுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது.

வடகொரியா வித்தியாசமான உத்தரவுகளுக்கு பெயர் பெற்ற நாடு. அந்த வகையில் தான் தற்போது புதிதாக ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.