;
Athirady Tamil News

கடவுச்சீட்டு வழங்க இலஞ்சம் பெற்ற 04 பேர் கைது!!

0

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற 04 பேரை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவரும் 03 தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக 42,000 ரூபா லஞ்சம் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் கடவுச்சீட்டு பெறுவதற்காக 22,000 ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 20,000 ரூபாவை சந்தேகநபர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.