;
Athirady Tamil News

நாளை இரவு 7 மணிக்கு இருட்டாக்கி போராட்டம் !!

0

மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாளை (20) இரவு 7 மணிக்கு அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறது.

இது தொடர்பில் மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் அனுருத்த சோமதுங்க கருத்து தெரிவிக்கையில்,

“நாளை இரவு 7 மணிக்கு, டிப் சுவிட்ச் மூலம் உங்கள் வீட்டின் மின் கட்டமைப்பை அணைக்கவும். மின் விளக்குகள், மின்சாதனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தவும். உங்கள் வீட்டு மின் விளக்குகளை அணைக்கவும். இதன் விளைவை அடையாளப்பூர்வமாக பிரபலப்படுத்துவோம்.” என்றார்.

மின் கட்டணம் 66% அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து மின்சாரம் சார்ந்த அனைத்து சேவைகள் மற்றும் உணவுப்பண்டங்களின் விலைகளும் இரு மடங்குகளால் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.