;
Athirady Tamil News

பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து: ஒருவர் பலி- கேரள மாணவர்கள் 16 பேர் படுகாயம்!!

0

மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் உள்ள ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகத்திற்கு களப்பயணத்திற்காக, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சென்றனர். மாணவர்கள் நேற்று மாலை பேருந்தில் கட்னி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பன்னா மாவட்டத்தில் உள்ள குவாகேடா கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து உதவியாளர் உயிரிழந்தார்.

மேலும் பேருந்தில் பயணம் செய்த 32 மாணவர்களில் 16 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் ராய்புரா அரசு மருத்துவமனையில் முதன்மை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் தலையில் படுகாயமடைந்த மாணவர் உட்பட இருவர் மேல்சிகிச்சைக்காக ஜபல்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.