;
Athirady Tamil News

சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடன்களை மறுவகைப்படுத்த இலங்கை முயற்சி!!

0

சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடன்களை மறுவகைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் தேவைகளிற்கு ஏற்ப தனது கடன்மறுசீரமைப்பு திட்டத்தினை இறுதி செய்வதற்காக சீனாவின் கடன்களை மறுவகைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது.

இரு தரப்பு கடன்களை மறுவகைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இது குறித்து சர்வதேச நாணயநிதியத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சீனாவின் கடன்களை மறுவகைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சீன கடன் இருதரப்பு மற்றும் வர்த்தக கடன் என மீளவகைப்படுத்தப்படவுள்ளது.

இது சீனாவின் இலங்கைக்கான இரு தரப்பு கடனை50 வீதத்தினால் குறைக்கும்.

இதன் பின்னர் சீனா இலங்கைக்கு கடன் வழங்கிள முக்கிய நாடுகள் என்ற நிலையில் தொடர்ந்தும் காணப்படாது.

இதன் பின்னர் சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து முன்னெடுக்க கூடிய நிலைக்கு தள்ளப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.