;
Athirady Tamil News

திருப்பாடுகளின் நாடகத்திற்கான பிரதி வழங்கும் நிகழ்வு!!

0

திருமறைக் கலாமன்றத்தால் ஆண்டுதோறும் தவக்காலத்தில் மேடையேற்றப்படும் இயேசுவின் பாடுகள்,மரணம்,உயிர்ப்பை சித்திரிக்கும் திருப்பாடுகளின் நாடகத்திற்கான பிரதி வழங்கும் வைபவம் தவக்காலத்தின் ஆரம்ப நாளாகிய நாளை மறுதினம் (22.02.2023) புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு இல.17,மார்ட்டீன் வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மன்றத்தின் ‘கலைஞான சுரபி’ தியான இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் திருமறைக் கலாமன்றத்தின் ஆரம்பகால இயக்குநர்களில் ஒருவரும்,ஊறணி பங்குத்தந்தையுமான அருள்பணி தி.இ.தேவராஜன் அடிகள் கலந்துகொண்டு ஆசியுரை வழங்குவதுடன், ஆற்றுகையில் பங்கேற்கவுள்ள கலைஞர்களுக்கான பிரதிகளையும் வழங்கி வைப்பார்.
பிரதி வழங்கும் நிகழ்வில் வழமையாக திருப்பாடுகளின் நாடகத்தில் பங்கேற்கின்ற அனைத்துக் கலைஞர்களையும்,புதிதாக இணைந்துகொள்ள விரும்புபவர்களையும்
கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இவ்வாண்டு திருப்பாடுகளின் நாடகம் மார்ச் மாதம் 30 ஆம் 31 ஆம் திகதிகளிலும் ஏப்ரல் மாதம் 01 ஆம் 02 ஆம் திகதிகளிலுமாக நான்கு நாள்களுக்கு ‘குருதி கழுவிய குவலயம்’ என்னும் பெயரில் மாலை 6.45 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.