;
Athirady Tamil News

“ஐஸ்” கேட்ட 50 பேருக்கு வலை வீச்சு !!

0

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் சுமார் 50 பேர் ஐஸ் போதைப்பொருளைக் கேட்டு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக ஹலவத்த உடப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் இந்த அழைப்புகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதேவேளை, குறித்த இளைஞனிடம் போதைப்பொருள் கேட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அழைப்பு விடுத்ததாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து சந்தேக நபருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து ஐஸ் போதைப்பொருளை கேட்டதாக கூறப்படும் நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.