;
Athirady Tamil News

அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார் ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ்!!

0

ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ். இவர் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்த வார இறுதியில் இந்தியா வருகிறார். வரும் 25-ம் தேதி இந்தியா வரும் ஒலப் ஸ்கோல்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். ஒலப் ஸ்கோல்ஸ் 26-ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்தப் பயணத்தின் போது ஜெர்மனி – இந்திய தொழில்துறையினர் இடையே ஆலோசனைகளும் நடைபெற உள்ளது.

இருநாட்டு தொழில்துறை தலைவர்கள், தொழிலதிபர்களுடன் இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜெமனி பிரதமர் ஸ்கோல்ஸ் கலந்துரையாட உள்ளனர். 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு 26-ம் தேதி இரவு ஒலப் ஸ்கோல்ஸ் ஜெர்மனி புறப்பட்டுச் செல்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.