;
Athirady Tamil News

ஷிண்டே அவரது தந்தையின் பெயரை கூறி ஓட்டு கேட்க வேண்டும்: உத்தவ் தாக்கரே காட்டம்!!

0

உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- பா.ஜனதா சிவசேனாவை அழிக்க திட்டம் போடுகிறது. எங்களின் கட்சி பெயர், சின்னத்தை திருடியது மிகப்பெரிய சதித்திட்டம். கட்சியின் பெயர், சின்னத்தை தான் திருட முடியும். தாக்கரே என்ற பெயரை யாரும் எங்களிடம் இருந்து திருட முடியாது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி என்னை தொடர்பு கொண்டு ஆதரவாக பேசினர். பீகார் நிதிஷ் குமாரும் தொடர்பு கொண்டார். அவரின் அழைப்பை எடுக்க முடியாமல் போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறினார். மேலும் சிவசேனாவின் கட்சி நிதி குறித்த கேள்விக்கு உத்தவ் தாக்கரே அளித்த பதிலில், “கட்சி நிதி பரிமாற்றம் குறித்து பேச தேர்தல் ஆணையத்திற்கு உரிமை இல்லை, அது ஒரு சுல்தான் போல செயல்பட முடியாது. நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கும், அரசியல் கட்சிக்குள் உள் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கும் மட்டுமே அதன் பங்கு உள்ளது. கட்சி நிதி விவகாரத்தில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டால், கிரிமினல் வழக்கு தொடரப்படும்” என்றார்.

சிவசேனாவின் பல்வேறு சொத்துக்களை ஷிண்டே பிரிவினர் கையகப்படுத்துவது குறித்த கேள்விக்கு, “எனது தந்தையின் (மறைந்த பால் தாக்கரே) பெயரையும், அவரது புகைப்படத்தையும் பயன்படுத்துவதை நிறுத்த அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா?. அவர் (ஷிண்டே) அவரது தந்தையின் புகைப்படத்தை வைத்து வாக்கு கேட்கட்டும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.