;
Athirady Tamil News

இன்று 12 மணித்தியால நீர்வெட்டு !!

0

களனியை அண்மித்த பல பகுதிகளில் இன்று காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையான 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வீதி புனரமைப்பு பணிகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ​தெரிவித்துள்ளது.

அதற்கமைய, வத்தளை, ஹெந்தல, அல்விஸ் டவுன், வெலிகடமுல்ல, கெரவலப்பிட்டி, மாபோல, நாயக்கந்த, கலகஹதுவ, மருதானை வீதி, ஹூனுப்பிட்டி, வெடிகந்த, வேவெல்துவ, கிரிபத்கொடை புதிய வீதி, பாதிலியாதுடுவ, தலுப்பிட்டிய வீதி முதல் அக்பார் டவுன் பாலம் வரையான பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.