;
Athirady Tamil News

பாராளுமன்றத்தை நள்ளிரவு கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு!!

0

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ்,

“தற்போதைய பாராளுமன்றத்தை கலைக்கும் சட்ட அதிகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பெறுவார். அந்த அதிகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயன்படுத்துவார் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் சரி, தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் சரி, இந்த முடிவுகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவை அல்ல. அது ஒருவரின் விருப்பத்திற்கு அமையவே நடைபெறுகிறது. நிதியமைச்சர் தான் அது எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்” என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.