;
Athirady Tamil News

பெரு நாட்டில் பயங்கர நிலச்சரிவு : மலையின் ஒரு பகுதியே சரிந்து விழுந்ததால் பரபரப்பு!!

0

பெரு நாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருவில் அத்தியா தெற்கு பகுதியில் உள்ள பழம்பெரும் மிக்க நகரங்களில் அயசிசோவும் ஒன்று. இந்த பகுதி மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஜக்ரா மற்றும் பவுசா ஆகிய நகரங்களை இணைக்கும் மலைப்பாதையில் நேற்று வழக்கமாக வாகனங்கள் சென்று கொண்டு இருந்த போது, சில சிறிய பாறைகள் சரிந்து பாதையில் விழுந்துள்ளன. சுதாரித்து கொண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டனர்.

அப்போது மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து டன் கணக்கான பாறைகளும் மணலும் பாதையில் விழுந்தன.
முன்னெச்சரிக்கையாக வாகனங்களை ஓட்டுநர்கள் பாதுகாப்பான தூரத்தில் நிறுத்தி விட்டதால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் மலைப்பாதை பாறைகளால் மூடப்பட்டதால் சாலையில் இருபக்கத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நிர்கின்றனர். பாறைகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையில் பெரு பேரிடர் மேலாண் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.