;
Athirady Tamil News

3,000 கிலோகிராம் போதைப் பொருளை அழிக்க நடவடிக்கை!!

0

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் 3,000 கிலோகிராம் எடையுடைய போதை பொருள் களஞ்சியத்தில் உள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த போதை பொருளை எரித்து அழிப்பதற்கு சட்ட ரீதியாக புதிய முறையொன்று உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.