;
Athirady Tamil News

கனடாவில் அதிகரிக்கப்படும் மேலுமொரு கட்டணம்..! வெளியான அறிவித்தல் !!

0

கனேடிய மாகாணமான றொரன்டோவில் விரைவில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்னும் சில வாரங்களில் இளையோர் மற்றும் வயது வந்தர்வர்களுக்கான போக்குரவத்து கட்டணங்கள் 10 சதத்தினால் உயர்த்தப்படவுள்ளது.

அதேவேளை, சிரேஸ்ட பிரஜைகள், கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்ட பயணிகளுக்கான கட்டணங்கள் என்பனவற்றில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

றொரன்டோ போக்குவரத்து ஆணைக்குழுவின் வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய இவ்வாறு கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண அதிகரிப்பு யோசனைத் திட்டம் நியாயமானதாக அமையப்பெறவில்லை என எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.