;
Athirady Tamil News

சாக்லேட் ஆலையில் வெடிவிபத்து: இருவர் பலி- 5 பேர் மாயம்!!

0

பென்சில்வேனியாவில் வெஸ்ட் ரெடிங் பகுதியில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஆர்எம் பால்மர் சாக்லெட் ஆலையில் இந்த வெடி விபத்து நிகழ்ந்தது. அதில் ஆலையின் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. மற்றொ கட்டிடம் சேதமடைந்தது. அருகில் இருக்கும் சில வீடுகள் வெடி விபத்தால் அதிர்ந்தன.

இந்த வெடி விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர் என்றும் 5 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தற்போது இடிபாடுகளுக்குள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறைத் தலைவர் வெய்ன் ஹோல்பென் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.