;
Athirady Tamil News

கலாசாலையில் இடம்பெற்ற நாடகநூல் வெளியீட்டு விழா!! (PHOTOS)

0

கலாசாலையில் இடம்பெற்ற நாடகநூல் வெளியீட்டு விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நாடகத் துறை விரிவுரையாளர் சந்திரிகா தர்மரட்ணம் எழுதிய கூடி வாழ்வோம் என்ற நாடக நூலின் வெளியீட்டு விழா 03.04.2023 திங்கள் பிற்பகல் 2 மணிக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெற்றது

கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாசாலையின் முன்னாள் அதிபர் வீரகத்தி கருணலிங்கமும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் கை. திலகநாதனும் கலந்து கொண்டனர்

நிகழ்வில் நூலின் வெளியீட்டுரையை கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் அ.பௌநந்தி வழங்கpனார். நூல் நயப்புரையை யாழ் கல்வி வலய நாடகத்துறை ஆசிரிய ஆலோசகர் யோ. யோண்சன் ராஜ்குமார் ஆற்றினார்;.

நூலை கலாசாலை அதிபர் வெளியிட்டு வைக்க அதன் முதற்பிரதியை ஓய்வு நிலை விரிவுரையாளர் வ.சி. குணசீலன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் கலாசாலைச் .சமூகத்தவர் மற்றும் நாடகத்துறை சார்ந்த ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.