;
Athirady Tamil News

வங்காளதேசத்தில் உள்ள மிகப்பெரிய ஜவுளி சந்தையில் தீ விபத்து- 8 பேர் படுகாயம்!!

0

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள பங்கா பஜாரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான இந்த பஜாரில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ மளமளவென பரவியது. விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுது்து சம்பவ இடத்திற்கு 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில், நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் எரிந்து சாம்பலானது. மேலும் 8 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.