;
Athirady Tamil News

மகனை கட்டையால் அடித்து கொன்ற தந்தை கைது- சமைத்து வைத்த கோழிகறியை சாப்பிட்டதால் ஆத்திரம்!!

0

தட்சிணகன்னடாவில் சமைத்து கோழிகறியை ருசிப்பதற்காக தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் மகனை கட்டையால் தந்தை அடித்து கொன்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுல்லியா தாலுகா குட்டிகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷீனா. இவரது மகன் சிவராம் (வயது32). சம்பவத்தன்று வீட்டில் கோழிகறி உணவை சமைத்துள்ளனர். அதனை ருசி பார்ப்பதற்காக சிவராமன் கேட்டுள்ளார். அப்போது அவரது தந்தை ஷீனா தரமறுத்ததாக தெரிகிறது. இதனால் தந்தை-மகனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஷீனா தனது மகன் என்றும் பாராமல் கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிவராம் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சுப்ரமணியா போலீசார், விசாரணை நடத்தினர். இதில் கோழிகறி சமைத்துவிட்டு வெளியே சென்ற ஷீனா மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்தபோது அதனை சிவராம் சாப்பிட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஷீனா தனது மகனை கட்டையால் அடித்து கொன்றார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஷீனாவை கைது செய்தனர். கொலையுண்ட சிவராமுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.