;
Athirady Tamil News

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி கிரண்குமார் பா.ஜ.க.வில் இணைந்தார்!!

0

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவி வகித்தவர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி. இவர் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தெலுங்கானா மாநில பிரிவினைக்கு பிறகு சமக்கிய ஆந்திரா (ஒருங்கிணைந்த ஆந்திரா) என்ற கட்சி தொடங்கி ஆந்திர மாநிலம் முழுவதும் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் தோல்வி அடைந்தார். அதன்பின், மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதனிடையே கர்நாடகாவைத் தாண்டி தென் இந்தியாவில் தங்களது கட்சியை விரிவுபடுத்த நினைக்கும் பா.ஜ.க.வுக்கு அவர் தலைமை தாங்கக்கூடும் என்று ஆந்திர வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கிரண் குமார் ரெட்டி இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.அந்தோனியின் மகன் அனில் அந்தோனி பா.ஜ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.