;
Athirady Tamil News

அமெரிக்காவில் பயங்கரம் ‘பேய் குழந்தை’ எனக் கூறி சிறுவன் கொன்று புதைப்பு?: இந்தியாவுக்கு தப்பி வந்த பெற்றோருக்கு வலை!!

0

அமெரிக்காவில் ‘பேய் குழந்தை’ எனக் கூறி தனது சொந்த 6 வயது மகனை பெற்றோரே கொன்று விட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த்தின் புறநகரான எவர்மேனில் வசிப்பவர் சிண்டி (37). இந்திய வம்சாவளி. இவருக்கு நோயல் ரோட்ரிக்ஸ் அல்வாரெஸ் (வயது 6) உட்பட 10 குழந்தைகள் உள்ளனர். சிண்டி தனது 2வது கணவர் அர்ஷ்தீப் சிங்குடன் நோயல் உட்பட 6 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். மற்ற 3 குழந்தைகள் அவர்களது தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு சிண்டிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இந்த குழந்தைகளை நோயல் பெரிதும் காயப்படுத்துவதாக சிண்டி அக்கம்பக்கத்தினரிடம் புகார் கூறி உள்ளார். அவனுக்கு பேய் பிடித்துள்ளது, இது சாத்தானின் குழந்தை என நோயலை சிண்டி துன்புறுத்தியதாக தெரிகிறது.

நோயல் பிறக்கும் போதே பல்வேறு உடல் உபாதைகளுடன் வளர்ச்சி குறைபாட்டுடன் பிறந்த சிறுவன். இவனை கவனித்துக் கொள்ள விரும்பாத சிண்டி, தனது கணவன் மற்றும் 5 குழந்தைகளுக்கு சமீபத்தில் பாஸ்போர்ட் எடுத்து இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். அவர்களுடன் நோயல் செல்லாத நிலையில் கடந்த மாதம் அவனை காணவில்லை என்ற புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். இதில் சிண்டி பல பொய்களை கூறியது தெரியவந்தது. இதனால் அவர்கள் நோயலை கொன்று புதைத்து விட்டு இந்தியாவுக்கு தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, சிண்டி மற்றும் அர்ஷ்தீப் சிங்கை அமெரிக்காவுக்கு நாடு கடத்தி விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.