;
Athirady Tamil News

இது அமைதிக்கு உகந்ததல்ல… அமித் ஷாவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா எதிர்ப்பு!!

0

அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பிராந்தியத்தின் ஒரு பகுதி என கூறி வரும் சீனா, அங்குள்ள சில இடங்களுக்கு கடந்த வாரம் புதிய பெயர்களை சூட்டியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த பெயர்களை நிராகரித்தது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என்றும், புதிதாக பெயர்களை கண்டுபிடித்து சூட்டுவது கள யதார்த்த நிலையை மாற்றாது என்றும் கூறியது. இந்த சூழ்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

எல்லையோர கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கிபித்தூ பகுதியில் துடிப்பான கிராமங்கள் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். உள்துறை மந்திரி அமித் ஷாவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இந்திய அதிகாரிகளின் செயல்பாடுகள் சீனாவின் இறையாண்மையை மீறுவதாகவும், இது எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழலுக்கு உகந்ததாக இல்லை என்றும் சீன வெளியுறத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.