;
Athirady Tamil News

அடுத்த 5 தினங்களில் பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் – இந்திய வானிலை மையம்!!

0

இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், அடுத்த 5 தினங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் இன்று முதல் வெப்ப அலை வீசும். ஒடிசாவில் நாளை வீசும் என கூறப்பட்டுள்ளது. தற்போது மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள், குஜராத், மகாராஷ்டிர மாநிலத்தின் உள்மாவட்டங்கள், ஒடிசா, தெலுங்கானாவில் அதிகபட்ச வெப்பம் 40 முதல் 42 டிகிரி செல்சியசாக உள்ளது. இதர மாநிலங்களில் 40 டிகிரிக்கும் குறைவாக உள்ளது.

ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் வழக்கத்தை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பநிலை பதிவாகி உள்ளது. ஒடிசாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏப்ரல் 16-ம் தேதி வரை அங்கன்வாடிகள், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.