;
Athirady Tamil News

மெட்ரோ ரெயில் நிலைய லிப்டில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது!!

0

டெல்லியின் ஜசோலா மெட்ரோ ரெயில் நிலையத்தில் லிப்டில் சென்றபோது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அந்த நபரின் பெயரி ராஜேஷ் குமார் (வயது 26) என்பதும், தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

கடந்த 4ம் தேதி மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்காக வந்த ராஜேஷ் குமார், லிப்டில் ஏறியதும் பெண் தனியாக இருப்பதைப் பார்த்து மோசமான செய்கை காட்டி உள்ளார். மேலும் அவரைத் தொட்டு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே, ராஜேஷ் ரெயிலில் ஏறாமல் வெளியேறி உள்ளார். அங்குள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் உள்ளூர் புலனாய்வுத்துறை உதவியுடன் ராஜேஷ் குமார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.