;
Athirady Tamil News

கை கழுவச் சென்றவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார் !!

0

களனி ஆற்றில் தவறி விழுந்து 42 வயதுடைய நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யட்டியந்தோட்டை அத்தனகெலய பிரதேசத்தில் நேற்று (14) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

களனி பிரதேசத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பும் வேளையில், அத்தனகெலய பிரதேசத்தில் களனி ஆற்றுக்கு அருகில் உணவு அருந்திவிட்டு கைகளை கழுவச் சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதுடன், கடற்படையினருடன் இணைந்து குறித்த நபரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.