;
Athirady Tamil News

கேரளாவில் கடல் அலையில் சிக்கி தமிழக டாக்டர்-சிறுமி பலி: சுற்றுலா வந்தபோது பரிதாபம்!!

0

கேரள மாநிலத்திற்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அவர்கள், நேற்று திருவனந்தபுரம் விழிஞ்சம் வந்தனர். அவர்கள் அங்குள்ள சுற்றுலா விடுதியில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் சுற்றுலா வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் ராஜாத்தி (வயது 45) தனது உறவினர் மகள் சாய்கோபிகா (9) மற்றும் சிலருடன் கடற்கரையில் நடைபயிற்சி சென்றார். அவர்கள் கடல் அலை யில் கால் நனைத்தபடி நடந்து சென்ற போது, ராட்சத அலை வந்தது.

அந்த அலையில் டாக்டர் ராஜாத்தி, சாய்கோபிகா ஆகியோர் சிக்கிக் கொண்ட னர். அவர்களை அங் கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தபோதும் பலனின்றி டாக்டர் ராஜாத்தி, சாய்கோபிகா பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் சுற்றுலா வந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.