;
Athirady Tamil News

இந்தியாவில் 4-வது நாளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!!

0

இந்தியாவில் புதிதாக 10,093 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 12-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 7,830 ஆக இருந்தது. மறுநாள் 10,158, 14-ந்தேதி 11,109, நேற்று 10,753 ஆக இருந்த நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேநேரம் பாதிப்பு நேற்றைவிட சற்று குறைந்துள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 5.61 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 4.8 சதவீதமாகவும் உள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 3,076, டெல்லியில் 1,396 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 18 ஆயிரத்து 115 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 6,248 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 29 ஆயிரத்து 459 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட 3,822 அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 57,542 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லியில் 5 பேர், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் தலா 3 பேர், கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா 2 பேர், அரியானா, ஒடிசா, தமிழ்நாடு, உத்தரகாண்டில் தலா ஒருவர் என 19 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட 4 மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 114 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.