;
Athirady Tamil News

ஃபெடக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் சுப்ரமணியத்துக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது!!

0

ஃபெடக்ஸ் போக்குவரத்து நிறுவன தலைவர் ராஜ் சுப்பிரமணியத்துக்கு சிறந்த குடிமகனுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருதை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கினார். உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனங்களுள் ஒன்றான ஃபெடக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜ் சுப்ரமணியம்(55) பொறுப்பு வகித்து வருகிறார். இவரின் சர்வதேச நிறுவனங்களில் தலைவராக பணியாற்றிய அனுபவம் மற்றும் வணிக நுண்ணறிவு காரணமாக ஃபெடக்ஸ் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

அமெரிக்கவாழ் இந்தியரான ராஜ் சுப்ரமணியத்துக்கு இந்த ஆண்டுக்கான இந்திய வம்சாவளி மற்றும் புலம்பெயர் இந்தியர்களுக்கு இந்தியா வழங்கும் உயரிய விருதான பிரவாசி பாரதிய சம்மான் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வாஷிங்டன்னில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துவின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து பிரவாசி பாரதிய சம்மான் விருதை ராஜ் சுப்ரமணியத்துக்கு வழங்கினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.