;
Athirady Tamil News

பாகிஸ்தானில் விபத்தில் சிக்கி அமைச்சர் பலி !!

0

பாகிஸ்தானில் இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி அமைச்சர் முப்தி அப்துல் ஷக்கூர் பலியானார்.

பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலானஅமைச்சரவையில் மத விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்து வந்தவர் முப்தி அப்துல் ஷக்கூர்.

இவர் நேற்று முன்தினம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மரியாட் என்ற இடத்துக்கு அருகே காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். அப்போது திடீரென மற்றொரு கார் ஒன்று, அமைச்சர் முப்தியின் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே அமைச்சரின் கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த அமைச்சர் முக்தியின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப், சக அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.