;
Athirady Tamil News

சீனா யுனான் மாகாணத்தின் வடமேற்கில் காட்டுத் தீ; ஹெலிகாப்டர் மூலம் ரசாயனக் கலவை தெளித்து தீ அணைப்பு..!!

0

சீனாவின் யுனான் மாகாணத்தின் வடமேற்கில் உள்ள லிஜியாங் நகர் அருகே ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க போராட வேண்டியுள்ளது. லிஜியாங் அருகே உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க அவசரகால மேலாண்மை அமைச்சகம் மற்றும் வனத்துறை சார்பில் முயற்சி எடுக்கப்பட்டது. ராணுவத்தின் விமானப்படை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் நேரில் அழைத்துவரப்பட்டு வனப்பகுதியை பார்வையிட அறிவுறுத்தினர்.

பின்னர் ராணுவத்தின் உதவியுடன் தீயணைப்புத்துறை வீரர்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் வேதி பொருட்கள் வனப்பகுதியில் தூவப்பட்டன. பலநூறு ஹெக்டேர் காடுகள் தீயில் எரிந்து நாசமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.