;
Athirady Tamil News

உள்ளூராட்சி தேர்தல் ; மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் வர்த்தமானி வெளியீடு!!

0

2023 உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதை உறுதி செய்யும் அரச வர்த்தமானி அறிவிப்பினை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

அந்த வர்த்தமானி அறிவிப்பில்,

ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அனைத்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் அறிவித்துள்ளனர்.

தேர்தலை நடத்துவதற்கான நிதிப் பற்றாக்குறையே தேர்தல் ஒத்திவைப்புக்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.

அந்த அறிவிப்பின்படி, திறைசேரி தேவையான நிதியை ஒதுக்கினாலோ அல்லது தேர்தல் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலோ தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.