;
Athirady Tamil News

தேசிய அரசாங்கம்: மறுக்கிறார் மனோ !!

0

தேசிய அல்லது எந்தவோர் அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூடிப்பேசவும் இல்லை என்றும் எந்தவித முடிவும் எடுக்கவும் இல்லை என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், புதன்கிழமை (19) தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை எதிர்வரும் 25ஆம் திகதியன்று பாராளுமன்றத்தின் தான் கூட்டாக முன்வைக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து அவர் அனுப்பிய அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

“இது திரித்து கூறப்படும் பொய்யான செய்தி. இது, ஆளுந்தரப்பில் இருந்து எதிரணிக்கு வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இணைய தளத்திலேயே முதலில் இச்செய்தி வந்தது.

ஐக்கிய மக்கள் கூட்டணிசக்தியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியாகவே தற்போது தமிழ் முற்போக்குக் கூட்டணி இருக்கின்றது.

தேசிய அல்லது எந்தவோர் அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூடிப்பேசவும் இல்லை. எந்தவித முடிவும் எடுக்கவும் இல்லை” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.