;
Athirady Tamil News

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது!!

0

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 11-ந்தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து 12-ந்தேதி முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கடந்த 15-ந்தேதி விஷூ பண்டிகை அன்று வழக்கம்போல் அதிகாலை நடை திறக்கப்பட்டு ஐயப்ப பக்தர்கள் விஷூக்கனி காணல் நிகழ்ச்சியில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.

இந்த நிலையில் 9 நாட்கள் நடைபெற்ற பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டது. முன்னதாக நேற்று மதியம் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் 18-படிகளில் வன தேவதைகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம்(மே) 14-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 19-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.