;
Athirady Tamil News

விமானத்தின் காக்பிட்டில் தோழியை அனுமதித்த ஏர் இந்தியா பைலட்… டிஜிசிஏ விசாரணை!!

0

துபாயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் பைலட், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி காக்பிட் பகுதிக்குள் தனது தோழியை அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 27ம் தேதி துபாயில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதே விமானத்தில் பயணித்த தனது தோழியை காக்பிட்டில் தன்னுடன் இருக்கும்படி பைலட் அழைத்ததாகவும், சுமார் மூன்று மணி நேரம் அவர் காக்பிட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த செயல் விமானப் போக்குவரத்து இயக்குநரக பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாகவும், உண்மை நிலையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.