தேஷபந்துவை கைதுசெய்ய தடை!!
கொழும்பு, காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்ட தளத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில், மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்யவோ அல்லது சந்தேகநபராக பெயரிடவோ மேன்முறையீட்டு நீதிமன்றம், திங்கட்கிழமை (24) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.