;
Athirady Tamil News

சிட்னியில் மே 24ம் தேதி குவாட் உச்சி நாடு நடைபெறும் – ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு !!

0

பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற கூட்டணியை உருவாக்கின. கடந்த ஆண்டு 2-வது உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்றனர்.

மாநாட்டின் முடிவில் இந்தோ-பசுபிக் பகுதியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்க குவாட் அமைப்பு முடிவு செய்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் மே 24-ம் தேதி குவாட் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை முதல்முறையாக நடத்த உள்ளது என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.