முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது குறித்து அவதானம்!!
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் விவசாய அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர்கள் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்க நடவடிக்கை எடுத்தால், உள்ளூர் சந்தையில் நிலவும் முட்டை தட்டுப்பாட்டுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு காண முடியும் என முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, முட்டை மீதான அதிகபட்ச சில்லறை விலை நீக்குவதற்கான யோசனையை அமைச்சரவைக்கு விரைவில் சமர்ப்பிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.