;
Athirady Tamil News

2 மாதங்களில் இல்லாத சரிவு- கொரோனா தினசரி பாதிப்பு 801 ஆக குறைந்தது!!

0

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கிய நிலையிலும், பரவலின் தாக்கம் தீவிரமாக இல்லை. இதனால் தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. பாதிப்பு நேற்று 1,272 ஆக இருந்த நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 801 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 18-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 843 ஆக இருந்தது.

மறுநாள் 1,071 ஆக உயர்ந்தது. இந்நிலையில் சுமார் 2 மாதத்திற்கு பிறகு பாதிப்பு இன்று மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 81 ஆயிரத்து 475 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,815 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 35 ஆயிரத்து 204 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 14,493 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று 4 பேர், கேரளாவில் விடுபட்ட 4 மரணங்கள் என மேலும் 8 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 778 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.