;
Athirady Tamil News

உக்ரைனின் பதிலடியால் ஆட்டம் கண்ட ரஸ்யா..! !

0

உக்ரேன் மீது ரஷ்யா ஏவிய 30 ஏவுகணைகளில் 29 ஏவுகணைகளை தான் வீழ்த்தியதாக உக்ரேன் கூறியுள்ளது.

எனினும், தாம் திட்டமிடப்பட்ட அனைத்து இலக்குகளும் அழிக்கப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.

ரஷ்யா முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் எண்ணிக்கையான ஏவுகணைகளை நேற்றிரவு கியீவ் நகரம்மீது ஏவியதாக உக்ரேன் கூறியுள்ளது.

30 சீர்வேக ஏவுகணை தரை, கடல், வானிலிருந்து 30 சீர்வேக ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதகாவும், இதனால் ஒருவர் உயிரிழந்ததாகவும் உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தள்ளது.

இந்நிலையில் இவற்றில் 29 ஏவுகணைகளை உக்ரேனிய வான் பாதுகாப்பு படைப்பிரிவினால் அழிக்கப்பட்டதாகவும் அவ்வமைக்சு தெரிவித்துள்ளது.

எனினும், நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களில், அனைத்து இலக்குகளும் அழிக்கப்பட்டன என ரஷ்யா தெரிவித்துள்ளது.

அதோடு உக்ரேனியப் படையினரின் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் இத்தாக்குதல்களில் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.