;
Athirady Tamil News

பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் !!

0

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு விரைவில் ஒருவர் நியமிக்கப்படுவார் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான கடிதத்தை நிதியமைச்சின் செயலாளர் ஜனக ரத்நாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.