;
Athirady Tamil News

உக்ரைனுக்கு தக்க பதிலடி உண்டு – நேர்காணலில் எச்சரித்த புடின் !!

0

நாங்கள் உக்ரைனிலுள்ள கட்டுப்பாட்டு மையங்களை தாக்குவது குறித்து பேசினோம். பதிலுக்கு உக்ரைன் வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது. அது ரஷ்யாவையும், ரஷ்யக் குடிமக்களையும் அச்சுறுத்த மக்கள் வாழும் வீடுகளை தாக்க முடிவு செய்துள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“இந்த போரை நாங்கள் ஆரம்பிக்கவில்லை.2014ஆம் ஆண்டு, உக்ரைன் தான் டான்பாஸ் பகுதியில் போரைத் தொடங்கியது.

அவர்களின் தாக்குதல் குறித்து நான் கவலைப்படவில்லை. பதிலடி கொடுக்க ரஷ்யாவைத் தூண்டும் முயற்சிகள் குறித்தே நான் கவலைப்படுகின்றேன்.

மேலும் உக்ரைன் மக்களுக்கு மற்றொரு அச்சுறுத்தல் உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அது Zaporizhzhia அணு மின் நிலையப் பணிகளுக்கு இடையூறு செய்யும் முயற்சிகளாகவோ அல்லது அணு ஆயுத பயன்பாடாகவோ இருக்கலாம்.”என எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.