;
Athirady Tamil News

’சிப்ஸ்’ ஆல் இலங்கை பெரும் சாதனை!!

0

இலங்கையின் முதலாவது, உருளைக்கிழங்கு சீவல் (Potato Chips) தயாரிப்பு தொழிற்சாலை முன்னோடியானது பெரும் வெற்றியளித்துள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

ரூ. 100 மில்லியன் செலவில் செயற்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கமானது, உருளைக்கிழங்கை பெறுமதி மிக்க பொருளாக சந்தைக்குக் கொண்டு வருவதாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள சில உணவு பதப்படுத்தும் நிறுவனங்களால் உருளைக்கிழங்கு சீவல்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில் அதற்கான மொத்த செலவு ரூ. 21 பில்லியன்களாகும். தற்போது சில தனியார் நிறுவனங்களால் அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2021 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி, இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு சீவல்கள் 6, 321 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.