;
Athirady Tamil News

மேகதாது விவகாரத்தில் சமரசம் கிடையாது- அமைச்சர் துரைமுருகன் உறுதி !!

0

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார். இதற்கு பதிலடி தெரிவிக்கும் வகையில், வேலூரில் செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துறை முருகன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- எவ்வித பேச்சுவார்த்தை, சமரசம் செய்தாலும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவு பாதிக்கப்படும். காவிரி பிரச்சினை குறித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முழுவதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.