;
Athirady Tamil News

உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது அமெரிக்கா..!

0

விண்வெளி மையங்களை கண்காணிக்க சைலண்ட் பார்கர் எனும் உளவு செயற்கைக்கோளை அமெரிக்கா விண்ணில் செலுத்துகிறது.

இந்த உளவு செயற்கைகோள், சீன அல்லது ரஷ்ய விண்வெளியில் உள்ள சுற்றுப்பாதையில் மற்ற செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி ஓடங்களை சேதப்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

பூமியில் இருந்து குறைந்த சுற்றுப்பாதையில் ஜியோசின்க்ரோனஸ் சுற்றுப்பாதையில் இயங்கும் வகையில், இந்த சைலண்ட் பார்கர் பூமிக்கு மேலே 35,400 கிலோமீற்றர் தொலைவில் நிறுத்தப்பட இருக்கிறது.

எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குப் பிறகு சைலண்ட் பார்கர் செயற்கைக்கோள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.