கேரளாவில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை- பஞ்சாயத்து கவுன்சிலர் கைது!!
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த மூளியார் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் முகமது குன்ஹி (வயது 58). இவர் அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு போதை பொருள் கொடுத்து பாலியல் தொல்லை செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சிறுவனின் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் முகமது குன்ஹி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 363, 377, 370 (4) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.