கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் -இலவசமாக வழங்கப்படவுள்ள கடவுச்சீட்டு !!
கனடாவில் காட்டுத்தீ பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணம் இன்றி கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காட்டுத்தீ பரவுகை காரணமாக கடவுச்சீட்டுக்களை தொலைத்தவர்கள் அல்லது கடவுச்சீட்டு சேதமடைந்தவர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். கனடாவில் நிரந்தரமாக பதிவோர் கனேடிய பிரஜைகள் மற்றும் தற்காலிக அடிப்படையில் வதிவோர் என அனைவருக்கும் இந்த சலுகையின் மூலம் கட்டணம் எதுவும் இன்றி கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச மாணவர்கள் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு பிரஜைகள் காட்டுத் தீ காரணமாக ஆவணங்களை இழந்திருந்தால் அவர்கள் தங்களுடைய வீசா காலத்தை நீடித்துக் கொள்ள கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.