;
Athirady Tamil News

விபத்தில் ஐந்து மாணவர்கள் காயம்!!

0

தியத்தலாவையில் இன்று(16) காலை இரண்டு பஸ்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் மற்றும் பொரளந்தையில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி பண்டாரவளை நோக்கி பயணித்த தனியார் பஸ் என்பன, தியத்தலாவை காஹகல்ல பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 5 பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை பஸ்ஸின் சாரதி ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

சம்பவம் தொடர்பில் தியத்தலாவை பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.