;
Athirady Tamil News

வாகனங்கள் இறக்குமதி செய்வதை அனுமதிக்க முடியாது!!

0

தற்போதைய நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் அத்தியாவசிய எாிபொருள் கொள்வனவிற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரே நேரத்தில் சுமார் 75 முதல் 80 மில்லியன் டொலர்களை கொள்வனவு செய்ய வேண்டி ஏற்பட்டது.

அதை சந்தை மற்றும் மத்திய வங்கியிடம் இருந்து கொள்வனவு செய்தது. இதனால் டொலாின் பெறுமதி சற்று அதிகாித்தது.

நம் நாட்டில் சிலா் டொலாில் முதலீடு செய்கின்ற நிலையில் அவா்களும் டொலாினை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனா்.

இவற்றின் விளைவாகவே டொலரின் பெறுமதி 320 ரூபாயாக எகிறியது.

அத்துடன் நேற்று மீண்டும் 306 ரூபாய் என்ற நிலைக்கு வந்ததையும் பார்த்தோம். இது ஒரு அசாதாரணமான சூழ்நிலை அல்ல, தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் நிகழும் சாதாரண ஒரு விடயம்.

எனினும் தற்போதைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.