;
Athirady Tamil News

இந்தியா – சீனாவின் பக்கம் திரும்பும் ரஷ்யா!

0

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா யுத்த பிரகடனம் செய்தது.

இதனைத் தொடர்ந்து ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருவதுடன், ரஷ்யாடமிருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதையும் மேற்கத்திய நாடுகள் நிறுத்தியுள்ளன.

இதனை தொடர்ந்து ரஷ்யா தனது கச்சா எண்ணெய் விற்பனையை ஆசியாவின் பக்கம் திருப்பியுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து தற்போது இந்தியா மற்றும் சீனா அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்து வருகின்றன.

இந்தநிலையில், கடந்த மாதம் இந்தியா மற்றும் சீனா இணைந்து ரஷ்யாவின் 80 சதவிகித கச்சா எண்ணெய் உற்பத்தியை கொள்வனவு செய்துள்ளது.

கடந்த மாதத்தில் ரஷ்யாவிடமிருந்து அதிகளவு கச்சா எண்ணெய் கொள்வனவு செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா – சீனா முன்னிலையில் உள்ளன.

ரஷ்யா தனது கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் விற்பனை செய்துவரும் நிலையில், தினமும் 5 லட்சம் பெரல் வாங்கி வந்த சீனா தற்போது 22 லட்சம் பெரல் கொள்வனவு செய்து வருகிறது.

அதேசமயத்தில், ரஷ்யாவிடம் குறைவாகவே கச்சா எண்ணெய் கொள்வனவு செய்து வந்த இந்தியா தற்போது தினமும் 20 லட்சம் பெரல் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.