;
Athirady Tamil News

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து – 15 பேர் பலி !!

0

கனடாவில் பேருந்து மீது பாரவூர்தி மோதி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் மனிடோபா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை அருகே பயணித்த பேருந்தே இந்த விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த 25 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளதுடன், திடீரென பேருந்து மீது எதிரே வந்த பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.

இதனால் நிலைதடுமாறி வீதியோரம் இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீட்பு படையினரின் உதவியுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.