;
Athirady Tamil News

சுதந்திரக் கட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு !!

0

கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, கட்சியின் பழைய யாப்பிற்கு அமைய செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவிற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பில் நீதிமன்றம் இதுவரை வழங்கியுள்ள இடைக்கால தடையுத்தரவிற்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.